உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கிண்ணியாவில் பழுதடைந்த காய்கறிகள் விற்பனை : மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கை!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
26 பார்வைகள்

திருகோணமலை – கிண்ணியா நகர சபைக்குட்பட்ட வாராந்த பொதுச் சந்தையில் பாவனைக்கு உதவாத காய்கறிகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி தலைமையிலான குழுவினர் திடீர் விஜயம் ஒன்றை இன்று(03.1.2026) மேற்கொண்ட போது குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் பழுதடைந்து, பாவணைக்கு உதவாது என கழிக்கப்பட்ட ஆடு, மாடு, பன்றிகளுக்கு என கொட்டப்படுகின்ற கிழங்கு, வெங்காயம், காய்கறிகளை வகைகளை சில வியாபாரிகள் சேகரித்து விற்பனை செய்து வந்துள்ளனர்.

அதே போன்று இன்னும் சிலர், இது போன்ற காய்கறிகளை வாங்கி, வீட்டில் வைத்து அதனை சுத்தம் செய்து உணவகங்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்வதாகவும் பொது மக்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டை தொடர்ந்து குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தவிசாளர், கிண்ணியா நகர சபையின் குத்தகைக்கு வழங்கப்பட்ட வாராந்த சந்தைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு, அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

74 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0