உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

தினேஷ் ஷாப்டரின் கொலை வழக்கு:வெளிவந்துள்ள புதிய தகவல்கள்!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
25 பார்வைகள்

தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் இன்று வரை சர்ச்சைகள் மற்றும் மர்மங்கள் தொடர்ந்த நிலையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட தலைமையில் மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த விசாரணைகளை ஆரம்பிக்கும் போதே குழுவுக்கு சில காரணங்கள் தென்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.கடந்த அரசாங்கங்களில் நடைபெற்ற விசாரணைகளின் போது விசாரணைக் குழுவுக்கு ஏதோ ஒரு வகையில் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதால் விசாரணைகள் தாமதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆனால் அழுத்தங்கள் யாரால் பிரயோகிக்கப்பட்டுள்ளன என்பது தெரியவரவில்லை.அத்தோடு சில முக்கியமாக தேவையான சீசீரிவி காணொளிகள் விசாரணைகள் குழுவால் எடுத்துக் கொள்ளப்படவில்லை.மேலும் அன்று இந்த விசாரணைகளில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள் விட்ட தவறுகள் தொடர்பிலும் ஒழுக்காற்று நடவடிக்னை எடுக்கப்படவுள்ளது. இன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ள குழுவுக்கு பல வழிகளில் தகவல்கள் தெரியவந்துள்ளன.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி பொரளை பொதுமயான வளாகத்தினில் காருக்குள் கைகள் கட்டப்பட்டு, வயரினால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் பிற்பகல் 3.30 மணியளவில் ர்த்தகர் தினேஷ் ஷாப்டர் கண்டுபிடிக்கப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதே தினம் இரவு 11.25 மணியளவில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

74 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0