உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
2 புதன்

ஒரே நாளில் கோடிகளை அள்ளிய தெஹிவளை மிருகக்காட்சிசாலை!

இலங்கை செய்திகள் 13 மணி நேரம் முன்
71 பார்வைகள்

பாடசாலை விடுமுறைக் காலத்தை முன்னிட்டு கடந்த 26 ஆம் திகதி தெஹிவளை விலங்கியல் பூங்காவைப் (மிருகக்காட்சிசாலை) பார்வையிடுவதற்காக 10,634 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதாக தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர்.சி.ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, அன்றைய தினம் மாத்திரம் 2.5 மில்லியன் ரூபா சாதனை அளவிலான வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளதாக பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

விலங்கியல் பூங்காவிற்கு வருகை தரும் வழமையான நாளாந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை சுமார் 2,500 ஆகக் காணப்படும் நிலையில், அன்றைய தினம் வருகை தந்தவர்களின் எண்ணிக்கை வழமையை விட நான்கு மடங்குக்கும் அதிகமாகும் என பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், கடந்த வருடம் பெறப்பட்ட 1.6 பில்லியன் ரூபா மொத்த வருமானத்தை இந்த வருடத்தில் கடந்து செல்ல முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தற்போது விலங்கியல் பூங்காவிற்குள் பார்வையாளர்களுக்கான உள்ளக வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், பாடசாலை மாணவர்களுக்காக தினசரி விசேட திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 

பல்வேறு விலங்கு பரிமாற்றத் திட்டங்களின் கீழ், தற்போது பூங்காவில் பற்றாக்குறையாக உள்ள ஒட்டகச்சிவிங்கிகளுக்காக எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் உகாண்டாவிலிருந்து இரண்டு ஜோடி ஒட்டகச்சிவிங்கிகளையும், ஆர்மீனியாவிலிருந்து ஒரு ஜோடி வரிக்குதிரைகளையும் (Zebras) நாட்டிற்குக் கொண்டு வருவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22வது திருத்தம் – மனுக்கள் மீதான பரிசீலனை இன்றும் தொடரும்..!

22வது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று (02) காலை மீண்டும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் மீதான…

44 0 0
இலங்கை செய்திகள்

தந்தை செல்வாவின் நினைவுத் தூபி உடைப்பு: தமிழரசுக் கட்சி கடும் கண்டனம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் நினைவுத் தூபி இனந்தெரியாத நபர்களால் உடைத்துச் சேதமாக்கப்பட்ட சம்பவத்துக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் கடும் கண்டனம்…

67 0 0
இலங்கை செய்திகள்

விரிவுரையாளர்கள் போராட்டத்தில் குதிப்பு!

பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்க அரசாங்கம் தவறியுள்ளதன் காரணமாக, அனைத்து அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் இன்று (02) போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக…

30 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராய்வு

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (01) அம்பாறை மாவட்ட செயலகத்தின் ‘ஏ.ஐ. விக்கிரம’ கேட்போர் கூடத்தில்…

44 0 0