உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
2 புதன்

போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எவ்வித மன்னிப்பும் கிடையாது

இலங்கை செய்திகள் 13 மணி நேரம் முன்
55 பார்வைகள்

போதைப்பொருள் விற்பனை செய்பவர்களுக்கு எவ்வித மன்னிப்பும் வழங்கத் தயாராக இல்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். 

சிறைச்சாலைகளில் அவசர மோதல் நிலைமைகள் ஏற்பட்டால் உடனடியாகச் செயற்படுதல் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நலன்புரி நடவடிக்கைகளை முறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் ஒருங்கிணைந்த பொறிமுறை குறித்த கலந்துரையாடலில் இன்று (01) காலை மஹர சிறைச்சாலை வளாகத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். 

அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகளை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதம் கடந்த காலத்தில் பாரிய பிரச்சினையாக இருந்தபோதிலும், அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

அதற்கமைய, அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்குத் தேவையான ஆட்சேர்ப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதன் அதிகாரிகள் இரவு 10.00 மணி வரை கடமையாற்றி அறிக்கைகளை விரைவாக வெளியிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார். 

கடந்த ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் 9,081 அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் தற்போது நிலுவையிலுள்ள அனைத்து அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகளையும் வெளியிடுவதே இலக்கு என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 

போதைப்பொருள் விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், வேறு எந்த அரசாங்கத்தின் கீழும் கைப்பற்றப்படாத அளவிலான போதைப்பொருட்களை தற்போதைய அரசாங்கம் கைப்பற்றி வருவதாகத் தெரிவித்தார். 

சிறைச்சாலையிலுள்ள அனைவரும் குற்றவாளிகள் அல்லர் என்றும், சிலர் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் செய்த தவறு காரணமாகச் சிறையிலிருப்பதால் அவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார். 

அத்துடன், கடந்த காலத்தில் சிறைச்சாலைகளில் ஏற்பட்ட சம்பவங்களின் போது பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் கிடைத்ததாக அவர் சுட்டிக்காட்டினார். 

மீண்டும் அத்தகைய நிலைமை ஏற்பட்டால் அதனை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு வலுவான பொறிமுறை தேவை என்பதால், இதுவரை 15 சிறைச்சாலைகளில் இவ்வாறான ஒருங்கிணைந்த பொறிமுறை நிறுவப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22வது திருத்தம் – மனுக்கள் மீதான பரிசீலனை இன்றும் தொடரும்..!

22வது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று (02) காலை மீண்டும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் மீதான…

44 0 0
இலங்கை செய்திகள்

தந்தை செல்வாவின் நினைவுத் தூபி உடைப்பு: தமிழரசுக் கட்சி கடும் கண்டனம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் நினைவுத் தூபி இனந்தெரியாத நபர்களால் உடைத்துச் சேதமாக்கப்பட்ட சம்பவத்துக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் கடும் கண்டனம்…

67 0 0
இலங்கை செய்திகள்

விரிவுரையாளர்கள் போராட்டத்தில் குதிப்பு!

பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்க அரசாங்கம் தவறியுள்ளதன் காரணமாக, அனைத்து அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் இன்று (02) போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக…

30 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராய்வு

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (01) அம்பாறை மாவட்ட செயலகத்தின் ‘ஏ.ஐ. விக்கிரம’ கேட்போர் கூடத்தில்…

44 0 0