உலக வங்கி உதவியுடன் இலங்கையில் 296 குளங்கள் புனரமைப்பு!
உலக வங்கியின் நிதியுதவியுடன், இலங்கையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறன் மற்றும் பாசனக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் 296 சிறிய குளங்களைப்புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஒருங்கிணைந்த கிராமிய-நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் காலநிலை மீளெழுச்சி திட்டத்தின் கீழ் 2029 ஆம் ஆண்டு வரை முன்னெடுக்கப்படவுள்ள இத்திட்டத்திற்காக 5.8 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் ‘டிட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட 18 மாவட்டங்களைச் சேர்ந்த 290 குளங்கள் அவசரக்கால அவசரகால பதிலளிப்புக் கூறுகளின் கீழ் 5.58 பில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்படவுள்ளன.
இதில் அதிகபட்சமாக பதுளையில் 97 குளங்களும், இரத்தினபுரியில் 29, மன்னாரில் 24 மற்றும் குருநாகலில் 19 குளங்களும் புனரமைக்கப்படுகின்றன.
அத்துடன் பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள மேலும் 6 குளங்கள் 256.2 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டம் நீர் சேமிப்பு மற்றும் விவசாயப் பாசனத்தை மேம்படுத்துவதுடன், வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற காலநிலை அபாயங்களிலிருந்து விவசாய சமூகங்களைப் பாதுகாக்கும் என விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவிடைத்துள்ளது.