உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
2 புதன்

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்:

உலக செய்திகள் 1 நாள் முன்
76 பார்வைகள்

ஹோர்முஸ் நீரிணையில் அமைந்துள்ள ஈரானின் தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை அடுத்து, அதற்குப் பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனால், உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை திங்கட்கிழமை 3%க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

ஆறு மாதங்களாக நீடித்து வரும் இந்த மோதலால், சர்வதேச சந்தையில் எண்ணெய் விநியோகம் தடைபடுமோ என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாயொன்று $2.87(3.26%) உயர்ந்து $90.97 ஆகவும், அமெரிக்க WTI ரக மசகு எண்ணெய் பீப்பாயொன்று $2.91 (3.49%) உயர்ந்து $86.31 ஆகவும் விற்பனையானது.

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஈரானின் ‘லாராக்’தீவு மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தின.

இதற்குப் பதிலடியாக, ஜோர்தானில் உள்ள இரண்டு அமெரிக்க விமானப் படைத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பதற்றமான சூழ்நிலை காரணமாக ஹோர்முஸ் நீரிணை வழியிலான சரக்குக் கப்பல்களின் இயக்கம் கடுமையாகக் குறைந்துள்ளது.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாளொன்றுக்கு 5 கப்பல்கள் மட்டுமே இந்த வழியைக் கடந்து சென்றுள்ளன.

ஈரான் மீது வாரந்தோறும் புதிய தடைகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.

உலக அளவிலான எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு (20%) இடம்பெறும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தடையின்றித் தொடர்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

காலநிலை மாற்றத்துக்கு எதிராக சர்வதேச நடவடிக்கை தேவை

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பேரழிவு, பருவநிலை மாற்றத்துடன் தொடர்புடைய அபாயங்களை வெளிப்படுத்தியுள்ளதாக பிரதமர் பாலேந்திர ஷா தெரிவித்துள்ளார். இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 939 ஆக…

78 0 0
உலக செய்திகள்

சவூதியில் ‘மெக்கா கூட்டுப் பாதுகாப்பு’ நிரந்தர செயலகம்

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள ‘மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை’ நடைமுறைப்படுத்துவதற்காக சவூதி அரேபியாவில் நிரந்தர செயலகம் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.…

40 0 0
உலக செய்திகள்

டிரம்ப் நிர்வாகத்தில் அமெரிக்க ராணுவ செயலாளர் பதவி விலகல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் உயர்மட்ட ராணுவ அதிகாரி ஒருவர் பதவி விலகியுள்ளார். ராணுவ செயலாளர் டான் டிரிஸ்கோல், சுமார் 18 மாதங்கள் பதவி…

47 0 0
உலக செய்திகள்

நேபாள பேரழிவு: பலி எண்ணிக்கை 939 ஆக அதிகரிப்பு

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 939 ஆக அதிகரித்துள்ளதுடன், காணாமல் போனோரின் எண்ணிக்கை 4,250 ஆக உயர்ந்துள்ளது. திபெத்–நேபாள எல்லையில் ஏற்பட்ட பெரும் பனிப்பாறைச் சரிவைத்…

64 0 0