ஆசிய விளையாட்டுப் போட்டியில் நகித் ராணா இல்லை: பங்களாதேஷ் தேர்வுக்குழு அதிரடி முடிவு!
சிம்பாப்வே சுற்றுப்பயணத்தின் போது ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வரும் பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் நகித் ராணா, ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க மாட்டார் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை (BCB) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விலா எலும்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரைத் தவறவிட்ட ராணா, 6 வார கால ஓய்வுக்குப் பிறகு தற்போது மீண்டும் வலைப்பயிற்சியில் பந்துவீசத் தொடங்கியுள்ளார்.
அவர் மீண்டும் பயிற்சிகளுக்குத் திரும்பிய போதிலும், அவசரப்பட்டு எந்தவித ஆபத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இல்லை எனத் தலைமைத் தேர்வாளர் ஹபிபுல் பஷார் தெரிவித்துள்ளார்.
நகித் ராணா 100% ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாட மாட்டார் என்றும், அவரது புனர்வாழ்வு முறையான திட்டமிடுதலுடன் தொடரும் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரிலேயே நகித் ராணா களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது