உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
12 சனி

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க பிணையில் விடுதலை!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
77 பார்வைகள்

இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, புதுக்கடை பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் மேற்கொள்ளப்பட்ட பல மணி நேர விசாரணையைத் தொடர்ந்து அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். பின்னர் மாலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவரைப் பிணையில் விடுவிக்க நீதிமன்று உத்தரவிட்டது.

அங்கீகரிக்கப்பட்ட ஆள்சேர்ப்பு நடைமுறைகளுக்குப் புறம்பாக, தேசிய லொத்தர் சபையில் ஐந்து நபர்களை ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்து, அவர்களைத் தனது தனிப்பட்ட பணியாளர்களுடன் இணைத்துக் கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணை தொடர்பாக ரவி கருணாநாயக்க முன்னர் நான்கு சந்தர்ப்பங்களில் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டிருந்த போதிலும் அவர் ஆஜராகியிருக்கவில்லை. மேலும், இரு நாள்களுக்கு முன்னர் பத்தரமுல்ல, ராஜமல்வத்த வீதியிலுள்ள அவரது வீட்டுக்கு விசாரணையாளர்கள் சென்றிருந்த வேளையிலும் அவர் வீட்டில் இருக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஜனாதிபதியால் நீதிமன்றத்துக்கு மறைமுக அழுத்தம் : ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு!

அரசமைப்பு திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் வெளிவராத நிலையில், அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவோம் எனக் கூறி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நீதிமன்றத்துக்கு மறைமுக அழுத்தம் கொடுத்து…

97 0 0
இலங்கை செய்திகள்

எந்தக் கட்சியாலும் அரசைக் கவிழ்க்கவே முடியாது! : அமைச்சர் பிமல் ரத்நாயக்க திட்டவட்டம்!!

Photo – எந்தக் கட்சியாலும் அரசைக் கவிழ்க்கவே முடியாது!மொட்டுத் தரப்பினரின் போராட்டம் பயனளிக்காது!! தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக் கவிழ்க்கவோ…

86 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விசேட செயற்குழுவின் காலம் நீடிப்பு! : எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் எதிர்ப்பு!!

காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தலாம் என்பதை ஆராய்ந்து யோசனை மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட செயற்குழுவின்…

110 0 0
இலங்கை செய்திகள்

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் உலக சுற்றுலா தின விழா

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் எதிர்வரும்  25ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இடம் பெற உள்ள  உலக சுற்றுலா தின விழா…

91 0 0