பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளை புனரமைக்கக் கோரி போராட்டம்.!
கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளை புனரமைக்க கோரி இன்றைய தினம் (31) கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி உமையாள்புரம் முதல் முறிகண்டி வரையான பகுதிகளில் சுமார் 35க்கும் மேற்பட்ட பாதுகாப்பற்ற கடவைகள் காணப்படுகின்றன.
இந்த கடவைகளுக்கு பாதுகாப்பு கடவைகளை அமைக்குமாறு கோரி குறித்த போராட்டம் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மதத் தலைவர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அண்மையில் புகையிரத விபத்தில் உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் போக்குவரத்து அமைச்சர் ரயில்வே திணைக்களம் ஆகியவற்றிற்கான மகஜர்களும் கையளிக்கப்பட்டுள்ளன.


