உந்துருளி மோதி சிறுவன் உயிரிழப்பு.!
களுவாஞ்சிக்குடி பிரதான வீதியில் பயணித்த உந்துருளி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து சிறுவர்கள் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (22) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் கோட்டை கல்லாறைச் சேர்ந்த 17 வயதுடைய ஜெகநாதன் கிஷோர் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் வீதியை கடப்பதற்காக சம்பவ தினமான நேற்று இரவு 9.30 மணியளவில் 3 சிறுவர்கள் பாதை ஓரத்தில் நின்று கொண்டிருந்த போது வீதியில் வேகமாக வந்த உந்துருளி வேகக் கட்டுப்பாட்டை மீறி வீதியோரமாக நின்ற சிறுவர்கள் மீது மோதியுள்ளது.
இதில் உந்துருளியை செலுத்தி சென்ற சிறுவன் சம்பவ இடத்திலே உயிரிழந்ததுடன் அதில் பயணம் செய்தவர் மற்றும் வீதியோரத்தில் நின்ற 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.