உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

“சாகித்ய ரத்னா” விருது பெற்ற கலைஞர் மு.சிவலிங்கம் அவர்களின் “அமுதவிழா”

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
79 பார்வைகள்

மலையகத்தின் கலை, இலக்கியம், சிற்கதை, நாவல், நாடகம், திரைப்படம், தொழிற்சங்கம், அரசியல், மொழி பெயர்ப்பு என பன்முக ஆளுமை கொண்ட மூத்த எழுத்தாளரும், கலாபூஷணம் மற்றும் சாகித்ய ரத்னா விருதுகள் பெற்றவருமான மு.சி. என்று சிறப்பிக்கப்படும் மு.சிவலிங்கத்தின் அமுதவிழா நிகழ்வுகள் இம்மாதம் 27 ஆந் திகதி வியாழக்கிழமை பூரணை தினத்தன்று ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய கலையரங்கத்தில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை இடம்பெறவுள்ளது.

மங்கல விளக்கேற்றல் மற்றும் அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரி மாணவர்களின் தமிழ்த் தாய் வாழ்த்துடன் ஆரம்பமாகும் அமுதவிழா நிகழ்வில் மல்லியப்பூசந்தி திலகரின் வரவேற்புரையைத் தொடர்ந்து, கவிஞர் சு. முரளிதரன் தலைமையுரை நிகழ்த்துவார்.

நிகழ்வில் “சிவாமுதம்” சிறப்பிதழ் வெளியீட்டில் கலாநிதி பெ. சரவணகுமார் சிவாமுதம் இதழின் கலை, இலக்கியப் பார்வை என்ற தலைப்பிலும், கலாநிதி எம்.எம். ஜெயசீலன் அரசியல், சமூகப் பார்வை என்ற தலைப்பிலும், துரை. மதியுகராஜா மாகாண சபை உப தலைவராக மு.சி. என்ற தலைப்பிலும், பேராசிரியர் ஸ்ரீபிரசாந்தன் ஈழத்து தமிழ் இலக்கிய பரப்பில் மு.சி. என்ற தலைப்பிலும், சந்திரலேகா கிங்ஸ்லி மு.சி. யின் சமுக, அரசியல் தடம் என்ற தலைப்பிலும், சிராஜ் மஹூர் சக சமூகப் பார்வையில் மு.சி.யின் சமூகப் பணி என்ற தலைப்பிலும், சிவா பரமேஸ்வரன் சர்வதேச தமிழர் தளத்தில் மு.சி. என்ற தலைப்பிலும், ஹேமச்சந்திர பத்திரன சக சமூகப் பார்வையில் மு.சி.யின் இலக்கியப் பணி என்ற தலைப்பிலும், சு. தவச்செல்வன் மு.சி.யின் கலை இலக்கியத் தடம் என்ற தலைப்பிலும் கருத்துரை நிகழ்த்துவார்கள்..

தொடர்ந்து பொன். பிரபாகரன் நெறியாள்கையில், மு.சி,யின் “ஒப்பாரிக் கோச்சி” சிறுகதை நாடகமும், மு.சி.யின் வாழ்க்கைச் சுவடு திரைக்காட்சியும், மலையகத் தமிழ்ச்சங்கம் மு.சி.க்கு வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் கௌரவமும் இடம்பெற்று மு. சிவானந்தனின் நன்றியுரையுடன் நிறைவு பெறும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

74 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

82 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

77 0 0