உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
88 பார்வைகள்

வலப்பனை பிரதேச சபைக்குட்பட்ட குருந்தோயா வட்டாரத்தை மையப்படுத்தி, வலப்பனை பிரதேச சபை உறுப்பினர் திரு. மு.ராம்கி அவர்களின் ஏற்பாட்டிலும் தலைமையிலும் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

இதில் 240க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் பெற்றனர்.

நில்தண்டாஹின்ன ஆயுர்வேத வைத்தியசாலை மற்றும் கண்டி ஆயுர்வேத வைத்தியசாலை ஆகியவற்றின் முழுமையான பங்களிப்புடன் இம் மருத்துவ முகாம் ஒருங்கிணைக்கப்பட்டது.

​100 பயனாளர்களை இலக்காகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இம்முகாமில், எதிர்பார்ப்பையும் தாண்டி 247 பொதுமக்கள் கலந்துகொண்டு மருத்துவ சேவைகளைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

​இங்கிலாந்தைச் சேர்ந்த இரு மருத்துவர்களும், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இரு மருத்துவர்களும் இம்முகாமில் கலந்துகொண்டு தங்களது சேவைகளை வழங்கியமை சிறப்பம்சமாகும்.

நிகழ்வு குறித்து பிரதேச சபை உறுப்பினர் மு.ராம்கி தெரிவிக்கையில்:
​குருந்தோயா வட்டாரத்தில் முதன்முறையாக இத்தகையதொரு பிரம்மாண்ட மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது.

இங்கு வருகை தந்த மக்களின் வாழ்த்துகளும் நன்றிகளும் எனக்கு மேலதிகமாகச் சேவையாற்ற பெரும் மனநிறைவையும் ஊக்கத்தையும் அளித்துள்ளன என்றார்.

இப்பகுதியில் முதன்முறையாக இவ்வளவு பெரிய அளவில் நடைபெற்ற இம்முகாமிற்கு ஆதரவளித்த மருத்துவக் குழுவினருக்கும் நல்நெஞ்சங்களுக்கும் நன்றி தெரிவித்த திரு. மு.ராம்கி அவர்கள், எதிர்காலத்திலும் மக்களுக்குப் பயனுள்ள பல திட்டங்களைச் செயல்படுத்தவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

74 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

82 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

77 0 0