உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

வடக்கு – கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்றில் சஜித் உரை!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
128 பார்வைகள்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் முகம்கொடுக்கும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.

உப்பள அமைப்பும் காணிப் பிரச்சினைகளும்

“தனியார் காணிகளை எடுத்து உப்பு உற்பத்தி நிலையங்களை ஸ்தாபிப்பதை விட, அரச காணிகளை எடுத்து இதனைச் செய்யுங்கள்.” – என்று அவர் வலியுறுத்தினார்.

வடக்கு மாகாணத்தின் வன்னி மாவட்டத்திலும், முல்லைத்தீவு நிர்வாக மாவட்டத்தில், கொக்குத்தொடுவாய் பிரதேசத்தில் 54 ஏக்கர் நிலப்பரப்பில் உப்பளம் அமைக்கப்படுகின்றது என்றும், அதனை விட மாத்தளன் பிரயோசனமானது என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார் என்று குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர், இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அமைச்சர் ரவிகரனுடன் பேசி குறைபாடுகளைத் தீர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் கோரினார்.

மேலும், வடக்கு மாகாணத்தில் பாரிய காணிப் பிரச்சினைகள் நிலவுகின்றன என்றும், கடந்த காலங்களில் பொதுமக்களின் தனியார், விவசாய மற்றும் வதிவிடக் காணிகள் அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவித்த அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தையும் தீர்வையும் பெற்றுக்கொடுக்குமாறும் வலியுறுத்தினார்.

“இஸ்லாமிய பெண் உத்தியோகத்தர்களின் சீருடை தொடர்பான பிரச்சினையால் அவர்களை வேறு வைத்தியசாலைக்கு மாற்றியமை பொருத்தமான விடயமல்ல.” என்றும் இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விசனம் தெரிவித்தார்.

கல்முனை வைத்தியசாலையில் புதிதாக நியமனம் பெற்ற முஸ்லிம் பெண் ஊழியர்களைச் சீருடை தொடர்பான விவகாரத்தில் வேறு வைத்தியசாலைக்கு இடமாற்றியுள்ளமை பொருத்தமற்ற நடவடிக்கையாகும் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், எமது நாட்டில் அவரவர் மத மற்றும் கலாசாரத்தைப் பின்பற்றும் உரிமை அனைவருக்கும் உண்டு என்பதைச் சுட்டிக்காட்டினார்.

இந்த அரசு தமது தேர்தல் மேடைகளில் இனம், மதம், குலம், வகுப்பு ரீதியான எந்தப் பாரபட்சமும் பார்க்காமல் செயற்படுவதாகக் கூறிவிட்டு, தற்போது புதிதாக நியமனம் பெற்ற 9 பேரை சீருடை விவகாரத்துக்காக இடமாற்றம் செய்வது கொள்கை விளக்கங்களுக்கு முரணானது என்றார்.

எனவே, உடனடியாக மேற்படி 9 ஊழியர்களையும் மீண்டும் கல்முனை வைத்தியசலையிலேயே பணியில் அமர்த்தி, அவர்களின் கலாச்சாரத் துக்கேற்ப சீருடை அணிய அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினரின் பேரணிகளால் அரசுக்கு எந்தச் சவாலும் இல்லை.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் மக்கள் பேரணிகள் மற்றும் அரசியல் கூட்டங்கள் அரசுக்கோ அல்லது தேசிய மக்கள் சக்திக்கோ எந்தவிதமான அரசியல் சவாலையும்…

33 0 0
இலங்கை செய்திகள்

சந்தர்ப்பவாத அரசியலுக்காகவே மீண்டும் மஹிந்தவிடம் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில தஞ்சம்.!

“கடந்த காலங்களில் ராஜபக்ஷக்களுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோரும் தற்போது மீண்டும் மஹிந்தவிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களின் அரசியல் கலாச்சாரம் இதுவேயாகும்” என்று தொழில்…

25 0 0
இலங்கை செய்திகள்

தெஹிவளை தாக்குதல் பின்னணி பற்றி வார இறுதியில் உண்மை வெளிவரும்.!

கொழும்பு, தெஹிவளையில் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் சம்பவமானது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களின் அதிகரிப்பைக் காட்டுகின்றது என்ற கருத்தைத் தாம் முழுமையாக நிராகரிக்கின்றார் என்று பொதுமக்கள் பாதுகாப்புப் பிரதி அமைச்சர்…

24 0 0
இலங்கை செய்திகள்

செம்மணி மனிதப் படு கொ*லைக்கு சர்வதேச விசாரணையே தீர்வு.!

“தமிழினப் படு கொலைக்கு கண்ணுக்கு முன்னால் கைகளாலே பிடிக்கக்கூடிய ஆதாரங்கள் செம்மணியில் கிடைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில், அதனை விசாரிப்பதற்கு மீண்டும் அந்த அரசிடமே அனுமதித்தால், அது எமது…

43 0 0