உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த ஜீவன் தொண்டமான்.!

68 பார்வைகள்

அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட சாமிமலை – கவரவிள தோட்டத்திற்கு நேரில் சென்று ஆலய மண்டபத்தில் தற்காலிகமாக தங்கியுள்ள மக்களையும் பாதிப்பிற்கு உள்ளான வீடுகளையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் பார்வையிட்டிருந்தார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்களின் தற்போதைய நிலைமைகள், அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் அவசரத் தேவைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.

தொடர்ச்சியாக மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் மக்கள் வாழ்வது தொடர்பில் நீண்டகால தீர்வு அவசியம். எனவே, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு கவரவிள தோட்ட முகாமையாளருடன் தொலைப்பேசியில் விடயத்தினை தெரிவித்து, மண்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள வீடுகளை சுற்றியுள்ள மண்மேடுகளை அகற்றுவதற்கும் ஏனைய உதவிகளை தோட்ட நிர்வாகத்தினால் செய்து கொடுக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.

அதேபோன்று, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்காக அரசாங்கத்தின் கவனத்திற்கும் இந்த விடயங்களை கொண்டு செல்லப்படும் என்றார்.

நாம் அரசாங்கத்தில் இருந்தபோதும் மக்களின் தோளோடு தோள் நின்று அவர்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தோம். தற்போது எதிர்க்கட்சியில் இருந்தாலும், மக்களின் பிரச்சினைகளை தொடர்ந்தும் முன்னிலைப்படுத்தி, அவர்களுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அர்ப்பணிப்புடன் செயற்படும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0