உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

ஃபெராரி நிறுவனத்தின் முதலாவது மின்சார வாகனம் ஏல விற்பனையில் சாதனை!

உலக செய்திகள் 2 நாட்கள் முன்
63 பார்வைகள்

ஃபெராரி(Ferrari) நிறுவனத்தின் முதலாவது மின்சார வாகனமான ‘ஃபெராரி லூஸ்’ (Ferrari Luce) ஏலத்தில் 40 மில்லியன் அமெரிக்க டொலருக்கு (சுமார் 29.5 மில்லியன் பவுண்டுகள்) விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளது.

கலிபோர்னியாவில் நடைபெற்ற ‘RM Sotheby’s’ தொண்டு நிறுவன ஏலத்தில், ‘ஃபெராரி லூஸ்’ வாகனம் 40 மில்லியன் டொலருக்கு விற்பனையானது.

ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட புதிய வாகனம் ஒன்று பெற்ற மிக அதிகபட்ச விலை இதுவாகும்.

இந்த நிதி முழுமையாக ஃபெராரி அரக்கட்டளையின் கல்வி சார்ந்த திட்டங்களுக்கு வழங்கப்படும்.

அப்பள் நிறுவனத்தின் முன்னாள் முதன்மை வடிவமைப்பாளர் சர் ஜோனி ஐவ் (Sir Jony Ive) மற்றும் அவரது ‘LoveFrom’ குழுவினரால் வடிவமைக்கப்பட்ட இந்த வாகனம், கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்டபோது கடும் விமர்சனங்களைச் சந்தித்தது.

5 இருக்கைகள், 4 கதவுகள் மற்றும் மின்சார மின்கல அமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளதால், இது ஃபெராரியின் பாரம்பரிய அடையாளத்தை இழந்துவிட்டதாகக் விமர்சகர்களும், நிறுவனத்தின் முன்னாள் தலைவர்களும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில், ஏலம் விடப்பட்ட இந்தச் சிறப்பு பதிப்பு வாகனம், ஒளியின் திசைக்கு ஏற்ப நிறம் மாறும் பிரத்யேக ‘Madreperla Semi-Gloss’ வெண்மை நிறப் பூச்சு, சிறப்பு சக்கரங்கள் மற்றும் பிரத்யேக உள்கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது.

ஆரம்ப கால விமர்சனங்கள் மற்றும் பங்குகளின் தற்காலிக வீழ்ச்சிக்கு மத்தியிலும், சீன சந்தையில் நிலவும் பலமான வரவேற்பு காரணமாக இந்த ஆண்டிற்கான விற்பனை இலக்கை ஃபெராரி நிறுவனம் ஏற்கனவே எட்டியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

செர்பியாவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பியது ரஷ்யா

செர்பியாவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது நாட்டின் அதிநவீன ‘ஐஎல்-76’ (IL-76) ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை உடனடியாக அனுப்பி…

50 0 0
உலக செய்திகள்

35 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்வு!

பங்களாதேஷில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (20) வாக்கெடுப்பு முறை மூலம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் பங்களாதேஷின் ஜனாதிபதியான மொஹமட்…

64 0 0
உலக செய்திகள்

ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரத் தடை – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும்…

55 0 0
உலக செய்திகள்

இந்த ஆண்டுக்குள் கிம் யொங் உன்னைச் சந்திக்க ட்ரம்ப் முயற்சி!

வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னை இந்த இலையுதிர் காலத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உதவியாளர்களை வலியுறுத்தி வருவதாக…

76 0 0