உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

நாமலை சிறையில் அடைத்தாலும் ஜனாதிபதியாக்குவோம்.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
57 பார்வைகள்

நாட்டு மக்கள் 2024 ஆம் ஆண்டு அரசியல் ரீதியில் எடுத்த தவறான தீர்மானத்தை திருத்திக் கொள்ள தயாராகவுள்ளார்கள். நாமல் ராஜபக்ஷவை சிறையில் அடைத்தாலும் 2029 ஆம் ஆண்டு அவரை ஜனாதிபதியாக்குவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்தார்.

அநுராதபுரம் பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
ஊழலுக்கு எதிராக செயற்படுவதாக குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் அரசியல் பழிவாங்கலை முன்னிலைப்படுத்தி ஜனநாயகத்துக்கு விரோதமான வகையில் செயற்படுகிறது. அரசியல் பழிவாங்கலுக்காகவே நீதிபதிகளின் பதவிக்காலம் முறையற்ற வகையில் அதிகரிக்கப்படுகிறது.

நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை. தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கான மறுசீரமைப்புக்களை மாத்திரமே அரசாங்கம் முன்னெடுக்கிறது. அதில் ஒரு அங்கமாகவே நீதிபதிகளின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை விமர்சிக்கும் தரப்பினர் தற்போது இலக்கு வைக்கப்படுகிறார்கள். கைது செய்யப்படுகிறார்கள்.

நாட்டு மக்கள் 2024 ஆம் ஆண்டு அரசியல் ரீதியில் எடுத்த தவறான தீர்மானத்தை திருத்திக் கொள்ள தயாராகவுள்ளார்கள்.

நாமல் ராஜபக்ஷவை சிறையில் அடைத்தாலும் 2029 ஆம் ஆண்டு அவரை ஜனாதிபதியாக்குவோம்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மீது மக்கள் அதீத நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்தவர்கள் தற்போது எம்முடன் ஒன்றிணைந்துள்ளார்கள். 2029 ஆம் ஆண்டு நிச்சயம் அதிகாரத்தை கைப்பற்றுவோம் என சாந்த பண்டார குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0