உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

இடமாற்றம் பெற்றுச் செல்லும் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளரிற்க்கு சேவை நலன் பாராட்டு!

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
92 பார்வைகள்

வவுனியா மாவட்டத்திற்கு இட மாற்றலாகிச் செல்லும் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் கனகரெத்தினம் திலீபன் அவர்களின் சேவை நலன் பாராட்டு விழா, மன்னார் மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் இன்று (17) மாலை நடைபெற்றது.

மன்னார் மாவட்டத்தில் சுமார் ஒன்பது ஆண்டுகளாக அனர்த்த முகாமைத்துவ பணிகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வந்த திரு. திலீபன் அவர்கள், பல்வேறு இயற்கை அனர்த்தங்கள் மற்றும் அவசரகால சூழ் நிலைகளின் போது மாவட்ட மட்ட ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

2017 ஆம் ஆண்டு மன்னாரில் தனது பணியை ஆரம்பித்த அவர், வெள்ளம், கடும் மழை, புயல், வறட்சி உள்ளிட்ட அனர்த்த காலங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நிலைமைகளை நேரடியாக கண்காணித்து, தேவையான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதில் தொடர்ந்து ஈடுபட்டார்.

அத்துடன், அனர்த்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பொதுமக்கள் விழிப்புணர்வு, தகவல் பரிமாற்றம் மற்றும் அவசர கால செயற்பாடுகள் தொடர்பில் அரச நிறுவனங்கள், உள்ளூராட்சி அமைப்புகள், ஊடகங்கள் மற்றும் பொது மக்களுடன் இணைந்து சிறப்பான பணிகளை முன்னெடுத்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் தனது நீண்டகால சேவையின் மூலம் பல்வேறு தரப்பினருடனும் நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டிருந்த அவரின் இடமாற்றம், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் அவருடன் இணைந்து பணியாற்றியவர் களிடையே உணர்வுபூர்வமான தருணமாக அமைந்தது.

பாராட்டு நிகழ்வின் போது, அவரது சேவையை பாராட்டிய மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள், புதிய பணியிடத்திலும் சிறப்பாகச் செயற்பட்டு அரச சேவைக்கு மேலும் பங்களிப்புகளை வழங்க வேண்டும் என வாழ்த்துத் தெரிவித்தனர்.

மன்னார் மாவட்டத்தில் அவர் ஆற்றிய அர்ப்பணிப்பான சேவைக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், வவுனியா மாவட்டத்தில் அவர் பொறுப்பேற்கவுள்ள புதிய பதவியில் சிறப்பான பணிகளை முன்னெடுக்க மன்னார் மாவட்டச் செயலகம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை அன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் தனது பதவிகளை உத்தியோகபூர்வமாக பதவி ஏற்பார் என்பது குறிப்பிடத்தக்கது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

61 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0