உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

இலங்கைக்கும் வியட்நாமிற்கும் இடையிலான நேரடி விமான சேவை ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
70 பார்வைகள்

இலங்கைக்கும் வியட்நாமிற்கும் இடையிலான நேரடி விமான சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், வியட்நாம் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முதலாவது விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

வியட்நாமின் ஹோ சி மின் நகரிலிருந்து புறப்பட்ட வி.என்.671 என்ற இலக்கத்தைக் கொண்ட எயார்பஸ் ஏ320 ரக விமானம் நேற்று (16) இரவு 11.02 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

புதிய விமான சேவையை வரவேற்கும் வகையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் திரின் தி டாம் பிரதம அதிதியாக கலந்துகொண்டுள்ளார்.

விமானத்துக்கு பாரம்பரிய நீர்த்தாரை மரியாதை செலுத்தப்பட்டது.

முதலாவது விமானப் பயணத்தின் மூலம் 164 பயணிகள் இலங்கையை வந்தடைந்ததுடன், அதே விமானத்தில் 172 பயணிகள் மீண்டும் வியட்நாம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர்.

புதிய நேரடி விமான சேவையின் கீழ் வாரத்திற்கு மூன்று நாட்கள், அதாவது ஞாயிறு, புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இலங்கை – வியட்நாம் இடையே விமானப் பயணங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு விமானப் பயணத்துக்கு சுமார் 4 மணி 30 நிமிடங்கள் தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0