உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
12 சனி

இந்தோனேசியாவில் மீண்டும் நிலடுக்கம்!

உலக செய்திகள் 4 வாரங்கள் முன்
96 பார்வைகள்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, இன்று (17) மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்நாட்டின் புளோரஸ் (Flores) பகுதியில் இன்று அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக ஜேர்மன் புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

எனினும் இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வௌியாகவில்லை.

இந்தோனேசியாவில் கடந்த 15ஆம் திகதி ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து பல பின்னதிர்வுகளும் ஏற்பட்டன.

இதனால் 53 பேர் உயிரிழந்ததுடன், காயமடைந்த பலரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட பாதுகாப்பு மையங்களில் 9,200 இற்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.

நிலநடுக்கத்தின் பின்னர் அந்நாட்டின் சுற்றுலாப் பகுதிகள் தொடர்பில் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததுடன், இந்தோனேசிய துறைமுக அதிகாரசபையினால் கடல்வழிப் போக்குவரத்துச் சேவைகளை இடைநிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், நிலநடுக்கம் காரணமாக குறித்த மாகாணங்களில் மின்தடை ஏற்பட்டிருந்த போதிலும், தற்போது அதனை வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

மசகு எண்ணெயின் விலை மேலும் அதிகரிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் அமைதியற்ற சூழல் காரணமாகவும் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள ஆபத்து நிலை காரணமாகவும், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை 105 அமெரிக்க…

117 0 0
உலக செய்திகள்

சிரேஷ்ட அமெரிக்கர்களுக்கு 5 ஆயிரம் டொலர் : ட்ரம்ப் அறிவிப்பு!

டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள 5000 டொலர் சலுகை வாக்குறுதியானது அமெரிக்காவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் இடைக்காலத் தேர்தல்களில் குடியரசுக் கட்சியினர் வெற்றி பெற்றால் அமெரிக்காவில் அனைத்து…

64 0 0
உலக செய்திகள்

ஏமனின் துறைமுக நகரத்தைக் கைப்பற்றிய ஹவூதி கிளர்ச்சியாளர்கள்!

ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏமனின் துறைமுக நகரமான மோகாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும், செங்கடல் கடலோரப் பகுதி வழியாக முக்கிய மூலோபாயத் தீவுகளை நோக்கி…

114 0 0
உலக செய்திகள்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியாவிற்கு விஜயம்

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆபிரிக்கா உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ள பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு நாளை (12) மற்றும் நாளை மறுதினங்களில் (13) டெல்லியில்…

101 0 0