காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு.!
கொஸ்லந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகல்தெனிய பகுதியில் தென்னந்தோப்பு ஒன்றில் நின்றிருந்த நபர் ஒருவர் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (14) காலை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் கொஸ்லந்த பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் குறித்த தென்னந்தோப்பில் காவலாளியாகப் பணியாற்றி வந்தவர் எனப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக கொஸ்லந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.