சற்றுமுன் இடம்பெற்ற விபத்து.!
கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த இரு தனியார் பேருந்துகள், கினிகத்தேனைப் பகுதியில் வைத்து ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகின.
சற்றுமுன்னர் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், அதிர்ஷ்டவசமாகப் பயணிகள் எவருக்கும் காயங்களோ அல்லது பாதிப்புகளோ ஏற்படவில்லை.
இரு பேருந்துகளின் ஓட்டுநர்களும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு அதிவேகமாக பயணித்தமையினால், முன்னால் சென்ற பேருந்தின் பின்புறத்தில் மற்றைய பேருந்து மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளதாக அதில் பயணித்த பயணியொருவர் தெரிவித்தார்.
விபத்து தொடர்பில் கினிகத்தேன பொலிசாரினால் விசாரணைகள் இடம் பெற்றுவருகின்றன.
குறித்த பேருந்தில் உயர்தரப்பரீட்சை மற்றும் பிரத்தியேக வகுப்புக்கு செல்லும் மாணவர்களும், பயணிகளும் பயணித்தனர். எனவே, போக்குவரத்து சேவையில் ஈடுபடுபவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனவும் அந்த பயணி குறிப்பிட்டார்.
தெய்வாதீனமாக இரு பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படவில்லை.
இது குறித்து கினிகத்தேன பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

