இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இலங்கைக்கு ஆபத்தா?
இந்தோனேசியாவின் மத்திய தீவுக்கூட்டத்திற்கு அருகில் இன்று அதிகாலை (15) 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலநடுக்கத்தின் தீவிரத்தைத் தொடர்ந்து, இந்தோனேசியாவின் கடலோரப் பகுதிகளுக்கு உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எனினும் இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக் கடலோரப் பகுதிகளுக்கோ அல்லது நாட்டிற்கோ எந்தவித சுனாமி அச்சுறுத்தலும் இல்லையென வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் சுனாமி முன்னெச்சரிக்கை மையம் என்பன அறிவித்துள்ளன.