உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

இராணுவத்தினரின் வசமுள்ள மக்களின் காணிகள் மக்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டும்! – கஜேந்திரன் எம்பி வலியுறுத்தல்

இலங்கை செய்திகள் 6 நாட்கள் முன்
101 பார்வைகள்

பருத்தித்துறை அஞ்சல் அலுவலகம் நிரந்தர காணி மற்றும் கட்டடம் இராணுவ வசமுள்ள நிலையில் அஞ்சல் அலுவலகம் தற்காலிக இடந்தில் இயங்கி வருவது தொடர்பில் ஆராயும் நோக்கோடு பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன் போது தற்காலிகமாக இயங்கி வரும் அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்று உரிய காணி தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

குறித்த பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்தின் நிரந்தர காணியை நேரில் சென்று பார்வையிட்டார். அஞ்சல் அலுவலக அலுவலர்கள் உரித்தான காணியை பாராளுமன்ற உறுப்பினருக்கு காண்பித்தனர்.

இதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

இராணுவத்தின் வசமுள்ள மக்களின் காணிகள் மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

பலாலி விஸ்தரிப்பு என்று கூறிக் கொண்டு பலாலி விமான நிலையத்தில் இரண்டாம் கட்டம் இந்திய அரசின் நிதியில் நிர்மாணிக்க வேண்டிய ஓடு பாதை முதல் நிர்மாணப் பணிகளையே அரசு இன்னும் தொடங்கத் தயாராக இல்லை.

இந்திய அரசு நிதியை வழங்கத் தயாராக இருந்தும் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளை அரசு முன்னெடுக்காத வரை மக்கள் தமது காணிகளை விமான நிலைய விஸ்தரிப்பிற்கு வழங்கக்கூடாது எனத் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

85 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

69 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

61 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

77 0 0