சற்றுமுன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு.!
வீரகெட்டிய, அக்ரஹெர பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த நபர் உடனடியாக வீரகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காகத் தங்காலை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் வீரகெட்டிய பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.