உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

நுவரெலியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கி வைப்பு.!

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
51 பார்வைகள்

கடந்த வாரம் மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 10 வட்டாரங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 164 குடும்பங்களுக்கு சுமார் 5000/= பெறுமதியான பொருட்கள் அடங்கிய பொதிகள் இன்று 13 ஆம் திகதி வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வு இன்று மதியம் 3.மணிக்கு மஸ்கெலியா பி.எம்.டி.கலாச்சார மண்டபத்தில் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் கண்டி இந்திய உதவி தூதரக அதிகாரிகளான திரு.யோகேஸ்வரன் மற்றும் திரு.தினேஷ்குமார் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.

மேலும், மஸ்கெலியா பிரதேச சபையின் உதவி தவிசாளர் பரமசிவம் ராஜ் அசோக் மற்றும் வட்டார உறுப்பினர்கள், மஸ்கெலியா பிரதேச சபையின் செயலாளர் எஸ்.ராஜவீரன் உட்பட மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.புஷ்பகுமார, மஸ்கெலியா கிராம உத்தியோகத்தர் திரு.குணதிலக்க, முன்னாள் அம்பகமு பிரதேச சபையின் தவிசாளர் கணபதி நகுலேஸ்வரன் அடங்கலாக பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த வாரம் மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட 10 வட்டாரங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 164 பயனாளிகளுக்கு மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் அவர்களினால் கண்டி இந்திய உதவி தூதரக உதவி தூதுவர் திருமதி அதிமேதகு சரண்யா எஸ்.கே.அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததை தொடர்ந்து இந்த நிவாரணப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0