கோர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.!
உலுக்குளம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உலுக்குளம வீதியின் பாவற்குளம் பகுதியில் நேற்று புதன்கிழமை (12) டிப்பர் வாகனமும் முச்சக்கரவண்டியும் மோதி இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.
உலுக்குளம திசையை நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனம், எதிரே வந்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் பாவற்குளம் பகுதியை சேர்ந்த 50 வயதுடைய நபராவார்.
விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி, அதில் பயணித்த இரு பெண்கள் மற்றும் ஒரு ஆண் உட்பட நால்வர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.
மேலும், விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து உலுக்குளம பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.