உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
44 பார்வைகள்

நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91,000 ஐக் கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாடு பிரிவு வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

தேசிய டெங்கு கண்காணிப்பு அமைப்பின் அண்மைக்கால அறிக்கையின்படி,
நாட்டில் இதுவரை மொத்தம் 91,059 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். ஆகஸ்ட் மாதத்தின் முதல் 12 நாட்களுக்குள் மாத்திரம் 5,714 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஜூலை மாதத்தில் மட்டும் 29,971 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதுவே இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் பதிவான அதிகளவான எண்ணிக்கையாகும்.

தற்போது இறப்பு விகிதம் 0.075 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

நாட்டிலேயே அதிகளவாக 19,406 நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். இது மொத்த நோயளார்களில் 21.31 சதவீதமாகும்.

கொழும்பு மாவட்டத்தில் 18,101 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இது மொத்த நோயளார்களில் 19.88 சதவீதமாகும்.

இவ்விரு மாவட்டங்களிலும் சேர்த்து மட்டும் 37,500 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தேசிய ரீதியில் பதிவான மொத்தப் பாதிப்பில் 41 சதவீதத்திற்கும் அதிகமான பங்காகும்.

நாடளாவிய ரீதியில் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், 119 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் ‘அதிதீவிர அபாயப் பகுதிகளாக’ அடையாளம் காணப்பட்டுள்ளன.

வாராந்த சராசரியாக நாளொன்றுக்கு 1,509 புதிய தொற்றாளர்கள் பதிவாகி வருகின்றனர்.

உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சூழலைத் தூய்மையாகப் பேணி, நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு பொதுமக்களுக்குச் சுகாதாரத் துறை அதிகாரிகள் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0