போதைப்பொருள் வர்த்தகரின் நெருங்கிய சகா கைது.!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவரும், வர்த்தகருமான ‘ஆல்டோ தர்மே’ (Alto Dharme) என்பவரின் நெருங்கிய நண்பர் என அடையாளம் காணப்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இரத்மலானை, இந்திரஜோதி வீதியை வசிப்பிடமாகக் கொண்ட, 32 வயதுடையவர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கல்கிசை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் குற்றத் தடுப்பு மற்றும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கல்கிசை பிரிவுக்குரிய குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் நேற்று (12) அவர் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.