உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
46 பார்வைகள்

இன்று மதியம் 2 மணியளவில் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமி மலை பகுதியில் ஹொரன பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உரித்தான ஓல்ட்டன் தோட்ட கிங்கோரா பிரிவில் உள்ள வனப் பகுதியில் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் கிடந்ததை கண்ட அந்த பிரிவில் பணியாற்றும் தொழிலாளர்கள் தோட்ட முகாமையாளருக்கு அறிவித்தனர்.

தோட்ட முகாமையாளர் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ். புஷ்பகுமார அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நல்லதண்ணி வன ஜீவராசிகள் அதிகாரி கவனத்திற்கு கொண்டு வந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த நல்லதண்ணி வன ஜீவராசிகள் அதிகாரிகள் இறந்த நிலையில் காணப்பட்ட சிறுத்தையை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக ரந்தெனிகல மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இறந்த நிலையில் காணப்பட்ட சிறுத்தை சுமார் 5 அடி நீளமும் 18 அங்குலம் உயரம் கொண்டது என நல்லதண்ணி வன ஜீவராசிகள் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0