உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
96 பார்வைகள்

ஹங்குரன்கெத்த பொலிஸ் நிலையத்தில் பொதுமக்களிடம் இருந்து அறவிடப்பட்ட 5 இலட்சத்து 24 ஆயிரத்து 290 ரூபா பணத்தை முறைகேடாகப் பயன்படுத்திய புகாரில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் நிலையத்துக்கு வரும் மக்களிடம் இருந்து முறைப்பாட்டுப் பிரதிகள், ஒலிபெருக்கி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் சைரன் குழாய்களுக்கான கட்டணங்களை வாங்கியபோது, அதற்கான உரிய பற்றுச்சீட்டுகளை வழங்காமல் இந்த பணத்தை அவர் கையாடல் செய்துள்ளமை பொலிஸ் உள்நாட்டு கணக்காய்வுப் பிரிவின் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைகேடு பற்றி அறிந்ததும், கண்டி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அனுருத்த பண்டார ஹக்மனவின் உத்தரவின்பேரில், கண்டி விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் உடனடியாக விசாரணை நடத்தி அந்தப் பொலிஸ் கான்ஸ்டபிளைக் கைது செய்தனர்.

இது தொடர்பாக வலப்பனை நீதவான் நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சோதனையின் போது, முறைகேடு செய்யப்பட்ட பணத்தில் வெறும் ரூபாய் 5,010 மட்டுமே பொலிஸ் பெட்டகத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் லலித் பதிநாக்க மற்றும் உயரதிகாரிகளின் மேற்பார்வையில் இது குறித்த மேலதிக விசாரணைகள் நடந்து வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் வயோதிபப் பெண் கொ*லை.!

புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் அவரது வீட்டிலேயே கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த…

36 0 0
இலங்கை செய்திகள்

அரசுக்கு 75 சதவீத மக்களின் ஆதரவு இருப்பின் மாகாண சபைத் தேர்தலை நடத்திக் காட்டுங்கள்.!

“இந்த அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் தொடர்ந்து பிற்போடுவதற்குத் திட்டமிட்டே செயற்பட்டு வருகின்றது. அதனாலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானிக்க அமைக்கப்பட்ட…

23 0 0
இலங்கை செய்திகள்

ஊழலில் இருந்து தப்பவே பழைய அரசியல்வாதிகள் ஒரே மேடையில் ஒன்றிணைவு.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உண்மையில் ஸ்ரீலங்கா பிணை முன்னணி என்றே அழைக்கப்பட வேண்டும். அனுராதபுரத்தில் நடைபெற்ற மக்கள் பேரணியின் போது எதிர்த்தரப்பினருக்கு எதிராக ‘அநுர திருடன்’ என்று…

41 0 0
இலங்கை செய்திகள்

‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ எனக் கூறி ஊழல்வாதிகள் பேரணி செல்வது கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம்.!

“அனுராதபுரத்தில் எதிர்க்கட்சியின் கூட்டத்துக்கு வந்தவர்கள் ‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ என்று குறிப்பிட்டுக் கொண்டு பேரணியாக செல்கின்றார்கள். இதுதான் கீழ்த்தரமான கலாச்சாரம். எமது ஆட்சியில் இலஞ்ச,…

42 0 0