புதையல் தோண்டிய நால்வர் சிக்கினர்.!
வெலிகந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முத்துவல்ல பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டிய நான்கு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வெலிகந்தை, ஹிங்குரக்கொடை, பொலன்னறுவை மற்றும் மெதிரிகிரிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 55, 59, 63 மற்றும் 67 வயதுடையவர்களாவர்.
நேற்று செவ்வாய்க்கிழமை (11) இரவு வேளையில் வலிகந்தை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் குழுவினருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட ஒரு ஸ்கேனர் இயந்திரம், வைபை ரௌட்டர், ஒரு பவர் பேங்க் மற்றும் உபகரணங்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் வெலிகந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.