படகு கவிழ்ந்து விபத்து; இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!
கற்பிட்டி, குரக்கன்ஹேன பகுதியில் உள்ள களப்பு ஒன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை (11) படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துனர்.
இச்சம்பவத்தில் 07 வயதுடைய சிறுவன் ஒருவனும், 13 வயதுடைய சிறுமியும் உயிரிழந்துள்ளனர்.
மீன்பிடி வலைகளைச் சேகரிப்பதற்காக இக்குடும்பத்தினர் படகில் பயணித்தபோதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்விபத்தில் சிறுவர்கள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், மீட்டெடுக்கப்பட்ட அவர்களின் தந்தை மேலதிக சிகிச்சைகளுக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.