உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மாகாண சபை தமிழ் மக்களுக்கான தீர்வு அல்ல – யாழ். மாநகர முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவிப்பு!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
125 பார்வைகள்

மாகாண சபை தமிழ் மக்களுக்கு தீர்வு அல்ல, சமஸ்டி  தீர்வே எமது நிலைப்பாடு என்று  சட்டத்தரணியும், முன்னாள் யாழ்ப்பாணம்  மாநகர முதல்வரும்,  தமிழ் மக்கள் கூட்டணியின் துணைப்  பொதுச் செயலாளருமான  விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

வடமராட்சியில் ஊடகவியலாளர்கள் மாகாண சபை தேர்தல் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும்போதே  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மாகாண சபை தேர்தல் ஒத்திவைக்கப்பட  முடியாது. உடனடியாக நடத்தப்பட வேண்டும்.  2018 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபை பதவியை இழந்திருந்தது. 2017 கிழக்கு மாகாண சபை பதவியை இழந்திருந்தது

கிட்ட தட்ட 6 ஆண்டுகளுக்கு மேலாக மாகாண சபை தேர்தல் நடத்தாமல்  அரசாங்கங்கள் வேண்டுமென்றே இழுத்தடிப்பு செய்து வருகிறது. 

அவர்களைப் பொறுத்தவரையில் இந்த நாடு ஒற்றை ஆட்சிக்குள்ள இருக்க வேண்டும்.  இந்த நாட்டிலே அதிகாரம் சற்று கூட பகிரக்கூடாது.  அதிலும் விசேஷமாக தமிழ் மக்கள் தங்களுடைய எந்தவொரு  பிராந்தியத்தின் மீது தங்களுடைய ஆளுமையை அல்லது தங்களுடைய ஆட்சியை செயற்படுத்த  கூடாது என்பதில் அவர்கள்  மிகத் தெளிவாக இருக்கிறார்கள்.

அந்த அடிப்படையில் தான் இந்த மாகாண சபை தேர்தல்கள் மாறி மாறி வந்த எல்லா  அரசாங்கங்களாலும்  இழுத்தடிப்பு செய்யப்படுகிறது.

2018 ஆம் ஆண்டிலேயே ஆட்சியில் இருந்தது  மைத்திரிபால சிறிசேனா ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கூட்டாட்சி.  அந்த அரசாங்கம் வேண்டுமென்று செய்த சதியினாலே இந்த தேர்தல் பொறிமுறையை இல்லாமல் செய்து இன்று இந்த தேர்தல்  நடைபெறாமல் இருக்கிறது. 

ஆகவே என்னைப் பொறுத்தமட்டில் 13வது திருத்தச் சட்டத்தில் எதுவுமே இல்லை என்பதை நான் 100 வீதம் ஏற்றுக் கொள்கிறேன்.
13-வது திருத்தச் சட்டம் எங்களுக்கு தீர்வு இல்லை என்பதையும்  நான் 100 வீதம்  ஏற்றுக் கொள்கிறேன். 

தமிழ் மக்களுக்கு சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வு திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கின்றோம்.
ஆனால் மாகாண சபை தேர்தலை வைக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு இருக்கிறது.

அந்த தேர்தலை கட்டாயமாக வைக்கப்பட வேண்டும் என்பது என்னுடைய நிலைப்பாடாக இருக்கிறது.  நான் சொல்லவில்லை மாகாண சபை எங்களுக்கு போதும். 

மாகாணசபையோடு எங்களுடைய உரிமை போராட்டத்தை முடித்துக் கொள்ளலாம் என்று ஒருபோதும் சொல்லப் போவதில்லை சொல்லவுமில்லை.

ஆனால் அரசியல் அமைப்பில் இருக்க கூடிய ஒரு  பொறிமுறையை  இயங்க வைக்கப்பட வேண்டும்.  அந்த ஜனநாயக பொறிமுறையை இயங்க வைக்கப்பட வேண்டியது கட்டாயத் தேவை. ஆகவே மாகாண சபை தேர்தல் கட்டாயமாக  வைக்கப்பட வேண்டும் என்பதை நான் ஆணித்தரமாக கூறிக் கொள்ள விரும்புகிறேன் என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0