நோர்வூட் பிரதேசத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கானவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
நோர்வூட் பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்காணார்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் இன்று மதியம் நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள அயரபி தோட்டத்தில் இடம் பெற்றுள்ளது என நோர்வூட் பொலிசார் தெரிவித்தனர்.
இது குறித்து மேலும் கூறுகையில்
பெண் தொழிலாளர்கள் தேயிலை கொழுந்து பறித்து கொண்டு இருந்த வேளையில் குளவி கொட்டியதில் 11 பேர் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர் என்றார்.
இவர்களில் 35 வயது முதல் 45 வயதுக்கு இடைப்பட்ட 3 பெண்கள் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஏனைய 8 பேர் வெளிநோயாளர் பகுதியில் சிகிச்சை பெற்று வெளியேறி உள்ளனர் என வைத்திய சாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.