நெடுங்கேணி பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.!
வவுனியா வடக்கு – நெடுங்கேணி பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட மக்களின் அன்றாடப் பிரச்சினைகள், உட்கட்டமைப்பு மேம்பாடுகள், விவசாயம், கல்வி மற்றும் சுகாதாரம் சார்ந்த முக்கிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.
இக்கூட்டம் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் அருணசாந்த கலாஞ்சலி தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க அவர்களும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் மற்றும் காதர் மஸ்தான் மற்றும் சத்தியலிங்கம் அவர்களும் திணைக்கள அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டு தீர்மானங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




