உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

காஸாவில் மனிதாபிமானத் தேவைகள் அதிகரிப்பு!

உலக செய்திகள் 1 வாரம் முன்
60 பார்வைகள்

காஸா மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்கள் பாலஸ்தீன மக்களுக்குத் தொடர்ந்தும் ஆபத்தை விளைவிப்பதுடன், அங்குள்ள மனிதநேயத் தேவைகளையும் கணிசமாக அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனிதநேய விவகாரங்களை ஒருங்கிணைக்கும் அலுவலகம் (OCuA) வெளியிட்டுள்ள அண்மைக்கால அறிக்கையில் இந்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் இஸ்ரேலிய படைகளின் துப்பாக்கிச் சூடு, பீரங்கித் தாக்குதல்கள் மற்றும் கடற்படைத் தாக்குதல்கள் காரணமாகப் பல பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக,ஐக்கிய நாடுகளின் மனிதநேய விவகாரங்களை ஒருங்கிணைக்கும் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், சர்வதேச மனிதநேயச் சட்டங்களின் கீழ் பொதுமக்களும், பொதுமக்களுக்கான உள்கட்டமைப்புகளும் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அந்த அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.

போர் ஆரம்பித்ததில் இருந்து காஸா பகுதியில் வெடிக்கும் அபாயமுள்ள 1,000 க்கும் மேற்பட்ட வெடிபொருட்களை, ஐக்கிய நாடுகளின் மனிதநேய விவகாரங்களை ஒருங்கிணைக்கும் அலுவலகத்துடன் இணைந்து பணியாற்றும் அமைப்புக்கள் அடையாளப்படுத்தியுள்ளன.

அத்துடன், இந்த மாதத்தில் மட்டும் 63,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுக்கு விழிப்புணர்வு அமர்வுகளையும் குறித்த அமைப்புக்கள் நடத்தியுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

செர்பியாவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பியது ரஷ்யா

செர்பியாவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது நாட்டின் அதிநவீன ‘ஐஎல்-76’ (IL-76) ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை உடனடியாக அனுப்பி…

50 0 0
உலக செய்திகள்

35 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்வு!

பங்களாதேஷில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (20) வாக்கெடுப்பு முறை மூலம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் பங்களாதேஷின் ஜனாதிபதியான மொஹமட்…

64 0 0
உலக செய்திகள்

ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரத் தடை – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும்…

55 0 0
உலக செய்திகள்

இந்த ஆண்டுக்குள் கிம் யொங் உன்னைச் சந்திக்க ட்ரம்ப் முயற்சி!

வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னை இந்த இலையுதிர் காலத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உதவியாளர்களை வலியுறுத்தி வருவதாக…

77 0 0