உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

தாஸ்நகர் விபுலானந்தர் முன்பள்ளியின் மழலைகள் திறனாய்வு நிகழ்வு…!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
166 பார்வைகள்

வவுனியா மகாறம்பைக்குளம்-தாஸ்நகர் விபுலானந்தர் முன்பள்ளியின் 2026ம் ஆண்டிற்கான வருடாந்த மழலைகள் திறனாய்வு நிகழ்வு இன்று (09.08.2026) முன்பள்ளியின் பொறுப்பாசிரியர் தலைமையில் மிக சிறப்பாக இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களின் செயலாளரும் சமாதான நீதவானுமாகிய பாலச்சந்திரன் சிந்துஜன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார்.

சிறப்பு விருந்தினர்களாக வவுனியா தெற்கு வலய முன்பள்ளி ஆசிரிய வளவாளர், முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் சி.சந்திரசேகரம் ஆகியோரும் கெளரவ விருந்தினர்களாக மகாறம்பைக்குளம் குடும்பநல உத்தியோகத்தர், அயல் முன்பள்ளி ஆசிரியர்கள், கிராமமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

முன்பள்ளி சிறார்களின்விளையாட்டு நிகழ்வுகள், இசையும் அசையும் நிகழ்வு, விநோத உடை நிகழ்வு என்பன இடம்பெற்றதுடன் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0