உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

ஓமந்தை மத்திய கல்லூரிக்கு சத்தியலிங்கம் எம்.பி விஜயம்.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
164 பார்வைகள்

வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட ஓமந்தை மத்திய கல்லூரிக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் இன்று (04.08.2026) களவிஜயம் செய்திருந்தார்.

இதன்போது பாடசாலையின் பிரதி அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்கத்தினர் ஆகியோரை சந்தித்து பாடசாலையின் தேவைப்பாடுகள், முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது பாடசாலை நிர்வாகத்தினரால் முன்னிலைப்படுத்தப்பட்ட பெளதீக வளப்பிரச்சினைகள் தொடர்பிலும், ஏனைய சில பிரச்சினைகள் தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் உடனடியாக வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் தொலைபேசியில் கலந்துரையாடினார்.

மேலதிகமான விடயங்கள் தொடர்பிலும் உரிய தரப்பினருடன் கலந்துரையாடியிருந்தார். அத்தோடு முன்னிலைப்படுத்தப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வுகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது தெரிவித்தார்.

இந்த விஜயத்தின்போது வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர் கந்தசாமி சிவபாலன், நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளர் பாலச்சந்திரன் சிந்துஜன் ஆகியோரும் இணைந்திருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

73 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

82 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

77 0 0