திருக்கோவில் பிரதேசத்தில் கோர விபத்தில் பெண் பலி!
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் இன்று காலை முச்சக்கரவண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது..
குறித்த விபத்தில் வவூணதீவு பகுதியயை சேர்ந்த 47வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துடன் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் திருக்கோவில் வைத்திய அனுமதிக்கபட்டு மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை வைத்திய சாலைக்கு கொண்டு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் இவ் விபத்தில் உயிரிழந்தவரின் சடலமானது திருக்கோவில் ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது…
இவ் விபத்து பற்றிய மேலதிக விசாரனையை திருக்கேிவில் பொலிஸ்சார் மேற்கொண்டு வருகின்றனர்…





