உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
26 ஞாயிறு

இராமாயணம் திரைப்படத்தின் முன்னோட்டம் குறித்து சாய் பல்லவி உருக்கம்!

சினிமா 3 நாட்கள் முன்
24 பார்வைகள்

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் இராமாயணம் திரைப்படத்தின் பிரத்தியேக முன்னோட்ட காட்சி திரையிடல் நிகழ்வு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டு, திரைப்படம் தொடர்பான தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

இதன்போது நிகழ்வில் பேசிய நடிகை சாய் பல்லவி, சீதை கதாபாத்திரத்தில் நடிப்பது தனக்குக் கிடைத்த ஆசீர்வாதம் என தெரிவித்தார்.

மேலும், ஒரு தெய்வீக கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது எளிதான விடயம் அல்ல. அந்தப் படைப்பை சிறந்த முறையில் உருவாக்குவதற்கு முழு அர்ப்பணிப்புடன் உழைக்கும் குழு தேவை.

சீதை கதாபாத்திரத்தில் நடிக்க நான் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். நடிப்பை முன்கூட்டியே திட்டமிட்டு அணுகவில்லை. தியானம் செய்யும் போது, சீதை அம்மா, நீங்கள் என் மூலம் செயல்படுங்கள், இந்த திரைப்படத்திற்காக நீங்கள் விரும்பும் வகையில் என் நடிப்பு அமையட்டும்’ என வேண்டிக்கொள்வேன்” எனக் குறிப்பிட்டார்.

இந்த திரைப்படத்தில் இராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, இராவணனாக யஷ், அனுமாராக சன்னி தியோல், லட்சுமணனாக ரவி துபே, சூர்ப்பனகையாக ராகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ளனர்.

இராமாயணம் திரைப்படத்தின் முதல் பாகம், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என திரைப்படக்குழு அறிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

கேள்வி கேட்டால் லத்தியால் பதில் சொல்லாதீங்க !

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி மற்றும் தாக்குதல் சர்ச்சையை ஏற்படுத்தி, அதற்கு எதிராக பிரபலங்கள் பலரும் கருத்து…

19 0 0
சினிமா

முன்பதிவிலேயே வசூலை வாரிக் குவிக்கும் ‘ஜனநாயகன்’

எச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் எதிர்வரும் 23 ஆம் திகதி வெளியாகவுள்ளது. இந்த திரைப்படம் தளபதி விஜய்யின் கடைசி திரைப்படம்…

61 0 0
சினிமா

இலங்கையின் தமிழ் மொழியை பாராட்டிப் பேசிய நடிகை த்ரிஷா

தென்னிந்திய நடிகை த்ரிஷா கிருஷ்ணன், இலங்கையின் தமிழ் மொழியை பாராட்டிப் பேசியுள்ளார். இலங்கைத் தமிழின் மீது தனக்கு ஈர்ப்பு உள்ளதாகவும், அதன் தூய்மையான தன்மையை மிகவும் ரசிப்பதாகவும்…

49 0 0
சினிமா

100 கோடி கொடுத்தாலும் சமூக வலைத்தளப் பக்கம் வர மாட்டேன்!

தனது நிழற்படங்களை மார்பிங் செய்து அவதூறாகப் பதிவிட்டமையால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே சமூக வலைதளங்களிலிருந்து முழுமையாக விலகியதாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார். இது குறித்து…

56 0 0