உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம்; அமைச்சரின் பொறுப்பற்ற தன்மையே உயிரிழப்புக்கு காரணம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
83 பார்வைகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் உயிரிழப்புகளுக்குப் பொறுப்பான அமைச்சர் சரியான நேரத்தில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதே காரணம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் கடுமையாகச் சாடியுள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார்.

“முதல் நாள் அசம்பாவிதம் இடம்பெற்றபோதே, அமைச்சர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நிலைமையைக் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால், இரண்டாம் நாள் ஏற்பட்ட பாரதூரமான வன்முறைச் சம்பவங்களைத் தடுத்திருக்கலாம். அமைச்சரின் பொறுப்பற்ற தன்மையே இத்தனை உயிர்கள் பலியாகக் காரணமானது. இது ஒரு திட்டமிடப்பட்ட படுகொலை போன்றது” என்றும் மரிக்கார் குறிப்பிட்டார்.

நீதி அமைச்சரின் செயல்பாட்டை முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க பாராட்டியமை குறித்து வினவியபோது, “அவர் அரசின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கோடே அவ்வாறு பேசுகின்றார். தனக்கு வழங்கப்பட்ட அரைவாசி பொது மன்னிப்பை முழுமையாக மாற்றிக்கொள்ளும் சுயநல நோக்கிலேயே அவர் அரசுக்குச் சார்பாகச் செயற்படுகின்றார் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று மரிக்கார் விமர்சித்தார்.

சிறைச்சாலை அதிகாரி ஒருவரின் கருத்தைச் சுட்டிக்காட்டிய மரிக்கார், “மேலிடத்திலிருந்து உத்தரவு கிடைத்திருந்தால் அசம்பாவிதத்தைத் தடுத்திருக்கலாம் என்று சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கூறியிருக்கின்றமை, அதிகாரிகளின் மெத்தனத்தைக் காட்டுகின்றது. 2 ஆயிரத்து 400 கைதிகளை ஒரே இடத்தில் வைத்திருக்கின்றமை பெரும் தவறு. வன்முறையில் ஈடுபட்ட 100 அல்லது 200 கைதிகளை அன்றைய தினமே வேறொரு சிறைக்கு மாற்றியிருந்தால், நிலைமை இவ்வளவு மோசமடைந்திருக்காது” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

71 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

62 0 0