நகுலேஸ்வரத்தில் 4 கிலோ வெள்ளி திருட்டு; இருவர் கைது.!
நேற்று இரவு கீரிமலை – நகுலேஸ்வரத்தில் 4 கிலோ வெள்ளி களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் இருவரை பொலிஸார் நேற்றையதினம் கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைகளின் பின்னர் இன்றையதினம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.