உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

12 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் அனுராதபுரத்தில் நபர் ஒருவர் கைது!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
65 பார்வைகள்

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப்பொருள் ஒழிப்பு விசேட நடவடிக்கையின் கீழ், அனுராதபுரம் மற்றும் ஹொரண ஆகிய பகுதிகளில் பொலிஸாரால் நடத்தப்பட்ட இரு வேறு முற்றுகைகளின் போது, 12 கிலோவுக்கும் அதிக எடையுடைய கேரள கஞ்சா மற்றும் பெருமளவிலான சட்டவிரோத மதுபானங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமத்திய மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, அனுராதபுரம் தமன்னாகுளம் பகுதியில் நேற்று விசேட சோதனையொன்று நடத்தப்பட்டது. இதன் போது, விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 கிலோகிராம் 320 கிராம் கேரள கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக 39 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மேலதிக சட்ட நடவடிக்கை மற்றும் விசாரணைக்காக அனுராதபுரம் தலைமையகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, நேற்று ஹொரண மூனகம பகுதியில் வலானை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் மற்றுமொரு பாரிய முற்றுகை முன்னெடுக்கப்பட்டது. அங்கு இரகசியமாக நடத்தப்பட்டு வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்றை முற்றுகையிட்ட பொலிஸார், மதுபானம் தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 945 லீற்றர் கோடா மற்றும் காய்ச்சப்பட்ட 375 லீற்றர் சட்டவிரோத மதுபானம் (கசிப்பு) என்பவற்றைக் கைப்பற்றினர்.

இந்த முற்றுகையின் போது, ஹொரண பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வலானை ஊழல் தடுப்புப் பிரிவினர் மற்றும் ஹொரண பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

முதலீடுகளை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் சவால்களை சரி செய்ய வேண்டும்.!

முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் தமது முதலீடுகளை இலகுவாகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒருவழி முதலீட்டு நுழைவாயில் (One-Stop Investment Portal) எதிர்பார்த்த பயனை முழுமையாக வழங்கும் வகையில்…

29 0 0
இலங்கை செய்திகள்

விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் நிகழ்வு.!

ஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபாகணேஷன் வழிகாட்டலில் மடக்கும்புற பகுதியில் சிறுபோகத்துக்கான விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் திட்டமும் வறுமை கோட்பாட்டின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு…

39 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் தொலைபேசியில் உரையாடல்.!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஷிசிர் கனாலுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளார். நேபாளத்தில் நிலவும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

59 0 0