குருநாகலில் குடும்பஸ்தர் தடியால் அடித்துக் கொ*லை! – சகோதரன் கைது
குருநாகல் மாவட்டம், வெல்லவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தல்விட்ட பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக, 58 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் தடியால் அடித்துப் படுகொ*லை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபருக்கும் அவருடைய சொந்தச் சகோதரருக்கும் இடையே ஏற்பட்ட திடீர் வாக்குவாதம் முற்றியதன் காரணமாகவே இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.
இதன்போது ஆத்திரமடைந்த சகோதரர், அருகில் இருந்த தடியொன்றால் பலமாகத் தாக்கியதில் படுகாயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்தக் கொ*லைச் சம்பவம் தொடர்பில் வெல்லவ பொலிஸ் நிலையத்துக்குப் பெறப்பட்ட அவசரத் தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து உடனடியாக விசாரணைகளை நடத்திய பொலிஸார், இந்தக் கொ*லையுடன் தொடர்புடைய சந்தேகநபரான உயிரிழந்தவரின் சகோதரரைக் கைது செய்துள்ளனர்.
பலியானவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காகக் குருநாகல் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இந்தக் கொ*லை குறித்து வெல்லவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.