உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள்; யார் ராஜா என்று பார்த்துவிடுவோம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
48 பார்வைகள்

மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் யார் ராஜா என்று தெரிந்துவிடும் என்றும், நாட்டு மக்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறும் அநுர அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சவால் விடுத்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்தச் சவாலை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் மாத்திரமே அரச பதவிக்குத் தகுதியானது ஜே.வி.பியா அல்லது உண்மையிலேயே பொதுமக்களுடன் இணைந்து நிற்கும் அரசியல் இயக்கமா என்பதை மக்கள் முன்னிலையில் அறிந்துகொள்ள முடியும். இனியாவது விவசாயிகளை அவமதிப்பதை ஆளும் தரப்பு நிறுத்த வேண்டும்.

இத்தகைய அவமதிப்புகளைச் செய்வதற்கு முன், தங்களுக்கு இந்த அதிகாரத்தை வழங்கியது யார் என்பதை ஆட்சியாளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு அரசால் உரிய தீர்வை வழங்க முடியாவிட்டால், நாட்டின் மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான, யதார்த்தமான, நடைமுறைச் சாத்தியமான மற்றும் முற்போக்கான தீர்வுகளை வழங்குவதற்கு எங்கள் தரப்பு தயாராக இருக்கின்றது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்ட வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு.!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) வைத்தியசாலைக்கு வருகை தந்த நிலையில், குறித்த…

39 0 0
இலங்கை செய்திகள்

மூத்த நடிகை லீலா ரஞ்சனி அவர்களுக்கு பொற்கிழி வழங்கி கௌரவிப்பு.!

இலங்கையின் நாடக மற்றும் திரைப்படத் துறையில் பல தசாப்தங்களாகத் தடம் பதித்து வரும் மூத்த நடிகை லீலா ரஞ்சனி அவர்களின் நீண்டகால கலைச் சேவையினைப் பாராட்டி, நடிகரும்…

42 0 0
இலங்கை செய்திகள்

முதலீடுகளை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் சவால்களை சரி செய்ய வேண்டும்.!

முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் தமது முதலீடுகளை இலகுவாகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒருவழி முதலீட்டு நுழைவாயில் (One-Stop Investment Portal) எதிர்பார்த்த பயனை முழுமையாக வழங்கும் வகையில்…

34 0 0
இலங்கை செய்திகள்

விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் நிகழ்வு.!

ஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபாகணேஷன் வழிகாட்டலில் மடக்கும்புற பகுதியில் சிறுபோகத்துக்கான விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் திட்டமும் வறுமை கோட்பாட்டின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு…

42 0 0