உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

கைது செய்யச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல்; சந்தேகநபர் தப்பியோட்டம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
39 பார்வைகள்

எல்பிட்டிய பகுதியில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்யச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தி, கைவிலங்குடன் சந்தேக நபர் தப்பியோடியுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

எல்பிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினர் கஹதுவ பகுதியில் விசேட சோதனைக்காக சென்ற போது, அங்கிருந்த சந்தேக நபர்கள் பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர்.

இதனையடுத்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொலிஸார் வான்நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதன்போது இரண்டு சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்ற வேளையில், இரண்டு பொலிஸ் அதிகாரிகள் அவர்களை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்துக் கைது செய்ய முயன்ற போது, அதில் ஒரு சந்தேக நபர் தான் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து உடனடியாகக் செயற்பட்ட மற்றைய பொலிஸ் அதிகாரி சந்தேக நபரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதில், சந்தேக நபரின் கையில் தோட்டா பாய்ந்து காயமேற்பட்டது. காயமடைந்த சந்தேக நபருக்கு பொலிஸார் உடனடியாகக் கைவிலங்கிட்டனர்.

எனினும், அந்த இடத்திற்கு திடீரென வந்த பிறிதொரு கும்பல், கைவிலங்குடன் இருந்த சந்தேக நபரை பொலிஸாரிடமிருந்து வலுக்கட்டாயமாக மீட்டு தப்பியோடியுள்ளது.

தப்பியோடியுள்ள நபர் படுகொலைச் சம்பவம் ஒன்றிற்கு உறுதுணையாக இருந்தமை உட்பட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கூர்மையான ஆயுதத் தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரி படுகாயமடைந்த நிலையில் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தப்பியோடிய சந்தேக நபரை மீண்டும் கைது செய்வதற்காகப் பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற அரசியல்வாதிகளிடம் விசாரணை

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்றஅரசியல்வாதிகளிடம் விசாரணை இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக், தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள…

56 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் மீனவர்கள் மூவர் கைது!

மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம்? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (28) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடம் இருந்து…

37 0 0
இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

46 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

67 0 0