உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

கொடூரமான படுகொ*லைகளைச் செய்துவிட்டு பிள்ளையான் நல்லவர் போல நடிப்பது வேடிக்கையானது!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
36 பார்வைகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) என்பவர் கொடூரமான கொ*லைகளையும், பல்வேறு குற்றச் செயல்களையும் புரிந்தவர்.

அவருக்கான தக்க தண்டனையை நீதிமன்றம் நிச்சயம் வழங்கும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பிள்ளையான் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறைச்சாலை வாகனத்துக்குக் கொண்டு செல்லப்படும் போது தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என ஊடகவியலாளர்களைப் பார்த்துக் கூறியிருந்தமை பற்றி கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்,

இது தொடர்பில் அமைச்சர் ஊடகங்களிடம் மேலும் தெரிவித்ததாவது:-

“மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயுதங்களைப் பயன்படுத்தி நிகழ்த்தப்பட்ட கொடூரமான படுகொலைகளின் பின்னணியில் பிள்ளையான் இருந்துள்ளார் என்பது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளில் வெளிவந்துள்ளது.

இவ்வாறான கொடூரக் கொலைகளையும் குற்றச் செயல்களையும் புரிந்துவிட்டு, இன்று தான் முற்றிலும் குற்றமற்றவர் என்று அவர் கூறுவது மிகவும் வேடிக்கையானது.

அதிகார பலத்தைப் பயன்படுத்தி அவர் இத்தனை காலம் மறைத்து வைத்திருந்த அத்தனை இரகசியங்களும், பழிவாங்கல் குற்றங்களும் இப்போது நீதிமன்றத்தின் மூலம் ஒவ்வொன்றாக அம்பலமாகத் தொடங்கியுள்ளன.

சட்டத்தின் முன்னால் யாரும் தப்பிக்க முடியாது. இத்தனை காலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில், பிள்ளையான் புரிந்த குற்றங்களுக்கான தக்க தண்டனையை நீதிமன்றம் மிக விரைவில் வழங்கும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற அரசியல்வாதிகளிடம் விசாரணை

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்றஅரசியல்வாதிகளிடம் விசாரணை இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக், தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள…

57 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் மீனவர்கள் மூவர் கைது!

மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம்? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (28) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடம் இருந்து…

37 0 0
இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

46 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

68 0 0