உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மூத்த பத்திரிகையாளர் ஏ.என்.எஸ். திருச்செல்வத்தின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள்!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
40 பார்வைகள்

“மூத்த பத்திரிகையாளர் ஏ.என்.எஸ். திருச்செல்வத்தின் மறைவு பத்திரிகைத்துறைக்கு மாத்திரமல்ல சமூகத்துக்கும் ஏற்பட்ட இழப்பு” என ‘தினக்குரல்’ பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் வீரகத்தி தனபாலசிங்கம் தெரிவித்தார்.

காலமான மூத்த பத்திரிகையாளர் ஏ.என்.எஸ். திருச்செல்வத்தின் இறுதிக்கிரியைகள் யாழ். வடமராட்சி, புற்றளையில் உள்ள அன்னாரில் இல்லத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

தொடர்ந்து அன்னாரின் உறவினர் தலைமையில் இடம்பெற்ற அஞ்சலிக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

“திருச்செல்வம் ஒரு நூலகராக இருந்தமையும் பத்திரிகைத்துறையில் சமாந்தரமாக பயணிக்கக் கூடியதாக அமைந்திருந்தது.

அவரின் பணியைப் பொறுத்தவரையில் அரசியலில் கூடுதலாக கவனம் செலுத்தாது சமூகம், மக்கள் நலன் சார்ந்த, சமயம், கல்வி போன்ற துறைகளிலே கவனம் செலுத்தி செய்திகளை வழங்கி வந்தார்.” – என்றார்.

இந்த அஞ்சலி நிகழ்வில் பத்திரிகையாளர் ஜெயக்குமார், வல்வை அனந்தராஜ், ஓய்வூதியர் சங்கத்தைச் சேர்ந்த கதிரமலை உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.

தொடர்ந்து அன்னாரின் பூதவுடல் தகனக் கிரியைக்காக ஆனைவிழுந்தான் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இறுதிக்கிரியைகளில் யாழ். தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் அற்புதானந்தன், பத்திரிகையாளர்கள், அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்புக்களைச் சேர்ந்தோர், நண்பர்கள், அயலவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற அரசியல்வாதிகளிடம் விசாரணை

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்றஅரசியல்வாதிகளிடம் விசாரணை இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக், தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள…

57 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் மீனவர்கள் மூவர் கைது!

மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம்? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (28) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடம் இருந்து…

37 0 0
இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

46 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

68 0 0