உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

தற்கொலைக்கு எதிராக இந்திய மாற்றுத்திறனாளி இளைஞன்  துவிச்சக்கரவண்டி விழிப்புணர்வு பயணம்!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
39 பார்வைகள்

தற்கொலைக்கு எதிராக இந்திய மாற்றுத்திறனாளி இளைஞன் முன்னெடுத்த துவிச்சக்கரவண்டி விழிப்புணர்வு பயணம் முல்லைத்தீவிலிருந்து பரந்தன் ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி இன்று ஆரம்பமானது.

தற்கொலை அற்ற சமூகத்தை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் இந்தியாவின் சென்னையைச் சேர்ந்த கமின் மொன்சாரி என்ற இளைஞன் குறித்த விழிப்புணர்வு பயனத்தை முன்னெடுத்து வருகிறார்.

தொலைபேசி பயன்பாட்டினால் பல்வேறு வகையான கொலைகள் தற்கொலைகள் இடம் பெறுவதை கண்டித்தும், இதிலிருந்து தற்போதைய சமூதாயம் மீண்டெழ வேண்டுமென வலியுறுத்தியும் இந்தியாவில் பல பகுதிகளில் துவிச்சக்கர வண்டி மூலம் பயணித்துள்ளதாக தெரிவித்தார்.

இதுவரை 65,000 கிலோ மீட்டர் வரை சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தியதாகவும் தற்பொழுது தற்பொழுது சகோதர நாடான இலங்கைக்கு வருகை தந்து இலங்கை முழுவதும் சைக்கிளில் பயணித்து தொலைபேசி பயன்பாட்டினால் ஏற்படும் தற்கொலைகள் மற்றும் விபத்துக்கள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் குறித்த இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

56 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

59 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

81 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

76 0 0