உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

டெங்குவினால் 31 பேர் பலி! – 51 ஆயிரத்துக்கு அதிகமானோர் பாதிப்பு!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
21 பார்வைகள்


இலங்கையில் இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 31 பேர் மரணமடைந்துள்ளனர் என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

ஜூன் 25 மற்றும் 26ஆம் திகதிகளிலான தரவுகளின் அடிப்படையில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்த நோயாளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இந்த மரண வீதமானது 0.06 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் பதிவாகியுள்ள ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 49 ஆக உயர்ந்துள்ளது.

இதில் குறிப்பாக, இந்த ஜூன் மாதத்தில் மாத்திரம் 17 ஆயிரத்து 208 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது இந்த மாதத்தில் நோய்த்தொற்றின் பரவல் மிகத் தீவிரமடைந்துள்ளதைக் காட்டுகின்றது.

மாகாண மட்டத்தில் மேல், தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதேநேரம், நாடளாவிய ரீதியில் 124 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அதிஅவதான வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் டெங்கு பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையைக் கருத்திற்கொண்டு, பொதுமக்கள் அனைவரும் மிகுந்த விழிப்புணர்வுடன் செயற்படுமாறு சுகாதாரத் துறையினர் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர். தங்கள் வீடுகள் மற்றும் சூழலை நீர் தேங்காதவாறு சுத்தமாக வைத்திருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

56 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

59 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

81 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

76 0 0